ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு முப்பது நாட்கள் விடுப்பு வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பேரறிவாளின் உடல் நிலையை கருத்தில்கொண்டு தனது மகனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உயர் நீதிமன்றில் கோரிக்கை மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பிலான விசாரணை இன்று நடைபெற்றுள்ளது.
இதன் போது சிறைத்துறை வளக்கறிஞர், சிறைக் கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளின் பின்னரே விடுப்பு வழங்க சட்டத்தில் இடம் உண்டு என்றும் 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்கப்பட்டமையை சுட்டிக்காட்டியதுடன் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை சிறைத்துறை நிர்வாகம் வழங்குவதால் அவருக்கு விடுப்பு வழங்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
இருந்தபோதிலும் உயர் நீதிமன்றம் அவருக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்க அனுமதி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் ஒரு வாரத்துக்குள் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.